2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வான் விபத்தில் 16 பேர் காயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மஹியாங்கனையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த வான் ஒன்று, வீதியை விட்டுவிலகிச் சென்று  வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

மேற்படி வானானது, நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதி, உலப்பனை பகுதியில், நேற்று (30) இரவு 12 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தினால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .