Editorial / 2024 மார்ச் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பினோயா மேல் பகுதியில் உள்ள தோட்ட வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
3 வயது 9 மாத வயதுடைய கதிரவேல் ரோஹித்தின் சடலமே விவசாய கிணற்றில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதால், குழந்தையின் தந்தை மற்றும் தோட்ட வீடுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .