Editorial / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் சிரிகல மொனராகலை தோட்டத்தில் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக முப்பது குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து திங்கட்கிழமை (08) அன்று வெளியேற்றப்பட்டனர்.
வீடுகளின் சுவர்கள் சாய்ந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அந்தக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக மொனராகலை பிரதேச செயலாளர் சதுரான சமரசேகர தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. நிஷாந்தவும் இந்தப் பணியில் இணைந்து, மொனராகலை மயூரகிரி ஜூனியர் கல்லூரியில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மையத்தில் தற்போது தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களின் நல்வாழ்வைப் பற்றி விசாரித்தார்.
இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

9 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
28 minute ago