2026 ஜனவரி 21, புதன்கிழமை

வீதிக்கு இறங்கிய அப்பம் கடைக்காரர்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

தெரணியகல நகரில் அப்பம் கடையொன்றை நடத்தி வரும் நபர் ஒருவர், சமையல் எரிவாயு கோரி, வீதிக்கு இறங்கி போராட்டம் ஒன்றை இன்று (16) முன்னெடுத்தார்.

குறித்த அப்பக் கடை வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் இவர்,கடந்த பல வாரங்களாக தமக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றும் இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது அப்பக் கடை மூடப்பட்டுள்ளதால், தமக்கு எவ்வித வருமானமும் இல்லை என்பதுடன், இதனால் நோயாளியான தனது தாய்க்கு சிகிச்சை செய்வதற்கு கூட பணமில்லை என தெரிவித்து, நகர மத்தியில், வெற்று சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X