R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உபெந்திரபிரியங்கர
கலவான- மத்துகம பிரதான வீதியின் சமன் தேவாலயத்துக்கு அருகில் கற்பாறைகள் சரிந்து விழுந்தமையால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கற்கள் சரிந்து விழுந்து சில நாட்கள் கடந்துள்ள நிலையில், அவற்றினை அகற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக, இரவு நேரங்களில் வாகனங்கைளை செலுத்தும் சாரதிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே இதனால் வேறு விபத்துகள் இடம்பெறுவதற்கு முன்னர், குறித்த கற்களை அகற்றுமாறும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
14 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 Mar 2026