2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Sudharshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என  நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (11) காலை 11 மணியளவில் புளியாவத்தை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.  

முச்சக்கரவண்டியின் சாரதிக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டமையே  இவ்விபத்துக்கு காரணம் என  நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .