Sudharshini / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சுஜிதா
சமூக நலன்புரி அமைச்சினூடாக 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமர்ஸட் தோட்ட கார்லி பேக் பாலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (13) பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அடிக்கல் நட்டப்பட்டு கடந்த 3 வருடங்களாக பாலம் புனரமைக்கப்படாமல் இருந்ததால் சமர்ஸட் தோட்ட கார்லி பேக் பிரிவு மக்கள், பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்
தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாலமும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் நிர்மாணப் பணிக்காக சமர்ஸட் தோட்ட நிர்வாகமும் கார்லி பேக் பிரிவு மக்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில், சமர்ஸட் தோட்ட உதவி முகாமையாளர் சுஜீவன் கண்ணா , நுவரெலியா பிரதேச செயலக சுபி விடுத்தி உத்தியோகத்தர் சந்திரலேகன், கிராம உத்தியோகத்தர் , திருமதி. வாசனா ஹேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


13 minute ago
43 minute ago
7 hours ago
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
7 hours ago
16 Apr 2026