2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நண்பியின் வீட்டில் இருந்து மாணவி மீட்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

தனது சிறிய தாயின் கொடுமைகளை தாங்க முடியாமல்  வீட்டிலிருந்து வெளியேறி, கட்டுகஸ்தோட்டை அம்பதென்னையிலுள்ள தனது நண்பியின் வீட்டில்; தங்கி இருந்த 15 வயது மாணவியை பொலிஸார் நேற்று(14) மீட்டுள்ளனர்.

கண்டி, தலாத்துஒயா பிரதேசத்தைச் சேர்ந்த இம்மாணவியின் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

வீட்டைவிட்டு தப்பி வந்த மாணவி தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்;ந்து  பொலிஸார் அம்மாணவியை மீட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X