Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், பசறை, கோணக்கலை தோட்ட லோவர் டிவிசன் தோட்ட பெண் தொழிலாளர்கள் 10 உட்பட 11 பேர் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
தேயிலை மலையில் சனிக்கிழமை (09) கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவி கூடொன்று கலைந்து தொழிலாளர்களை குளவிகள் கொட்டியுள்ளன.
குளவிகொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை காப்பாற்ற சென்ற இளைஞர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இவர்கள் தற்போது பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடராஜாமலர்வேந்தன்
53 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
15 Jan 2026