Editorial / 2023 மே 09 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அவ்விரு சிறுமிகளின் பெரிய தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் 12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிக் கைது செய்யப்பட்ட பெரிய தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே ஹட்டன் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு சிறுமிகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் தந்தை மறுமணம் முடித்துள்ளார் இந்த இரண்டு சிறுமிகளும் பெரிதந்தையின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.
பெரிய தந்தையானால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்தமை தொடர்பில் இவ்விரு சிறுமிகளும் தனது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதனை அடுத்து பாடசாலையின் நிர்வாகத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினை பெற்றுகொள்வதற்காக டிக்கோயா -கிளங்கன் ஆதாரவைத்திய சாலையில் இவ்விரு சிறுமிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்
33 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago
48 minute ago