2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பஸ் வண்டி கையளிப்பு

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தினால் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக பாடசாலைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக் கே.காந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அரசியற் பிரிவு முதன்மைச்செயலாளர் ஸ்ரீவஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .