2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

Kogilavani   / 2015 ஜூன் 01 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்  

தலவாக்கலை, பூண்டுலோயா பிரதான வீதி, ஹொலிரூட் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மேலும் இருவர் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பகுதியிலிருந்து ஹொலிரூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .