2025 ஜூன் 30, திங்கட்கிழமை

20ஆவது திருத்தம் சிறுபான்மையினரை பாதிக்கும்

Gavitha   / 2015 ஜூன் 09 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகையை 225ஆக வைத்து தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை 125க்கு மட்டுப்படுத்துவது சிறுபான்மையினரையும் சிறிய கட்சிகளையும் வெகுவாக பாதிக்கும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில், அவ்வியக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், நேற்று செவ்வாய்க்கிழமை (09) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

'20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்தது மகிழ்ச்சியான விடயமாகும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின்; எண்ணிக்கையை 225 ஆகவும் தேர்தல் தொகுதியின் எண்ணிக்கையை 125ஆகவும் மட்டுப்படுத்துவது, சிறிய அரசியல் கட்சிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நாட்டு மக்கள் நீண்டகாலம் எதிர்பாரத்த ஒரு திருத்தம் இதுவாக இருந்தபோதும் அதன் ஆரம்ப கால வரைபுகளில் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை 234 – 235ஆக இருக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

சிறுகட்சிகளுக்கும் சிறுபான்மையினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே இவ் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள், வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற சிறு கட்சிகளுக்கு தனது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்வதற்கு அங்கத்தவர் தொகையை அதிகரிப்பது அவசியமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தின்படி மூன்று பாரிய பிரச்சினைகள் உள்ளன.

1. 125 தேர்தல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு அதிக காலம் தேவைப்படும்,

2 சிறுபான்மையினரின் அங்கத்துவத்துக்கு தேவையான இரட்டை தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்க முடியாது போகும்.

3. வடக்கு பகுதியில் வாழும் சிங்கள மக்களதும் வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இது பாரிய சவாலாக அமையும்.

இத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தால் அது நிரைவேராமலிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மக்கள் வெருக்கும் இத்தேர்தல் முறையும் சாதாரண தர பரீட்சை கூட சித்தி அடையாத 94 உறுப்பினர்களையும் உயர்தர சித்தி அடையாத 142 உறுப்பினர்களையும்  ஐந்து வீதத்துக்கும்; குறைந்த பெண் உறுப்பினர்களையும் கொண்ட இது போன்ற ஒரு நாடாளுமன்றம் மீண்டும் உருவாகலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆகவே அமைச்சரவைக்கு முன் வைக்கப்பட்ட திருத்தம் இன்றைய தேவைக்கு ஏற்றவாரு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X