2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தேநீர் அருந்திய 80 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை பிட்டர்த்மலை தோட்டத்தில் இன்று புதன்கிழமை(10) காலை தேநீர் அருந்திய 80க்கும் அதிகமான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தொழிலாளர்கள் தேநீர் அருந்தியதையடுத்து, வாந்தி, தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், தொழிலாளர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

தேயிலை செடிகளுக்கு பயன்படுத்தும் கிருமிநாசினி, தேநீர் தாயரிக்க பயன்படுத்தப்பட்ட நீரில் கலந்ததால் தொழிலார்கள் நோய்வாய்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X