2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

வீதி அபிவிருத்திக்கு 219 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2015 ஜூலை 06 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 219 இலட்சம் ரூபாய் செலவில் கேகாலை கலபிட, சல்கல வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வீதியின் அபிவிருத்திப் பணிகள் நேற்று(5) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .