Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு விசேட கடன்திட்டமொன்றை வழங்குவதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள தேயிலைக்கான விலையின் வீழ்ச்சி காரணமாகவும் சமீப காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாகவுமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை உற்பத்தியின்போது, உரிமையாளர்கள் பல்வேறான நிதி நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றனர். இந்த கடன் திட்டம் நிதி பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவியாக அமையும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கோரிக்கையை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அரச மற்றும் வணிக வங்கிகளிலும் இந்த கடனை பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிடப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு 2 சதவீத வட்டி சலுகையில் 2 வருடங்களுக்கு இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago