Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 8 இலட்சத்து பத்தாயிரத்து 82 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,
எட்டு தேர்தல் தொகுதிகளை கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தில் 2014 ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 810,082 பேர் வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர்.
மேறபடி மாவட்டத்தில் எஹலியகொடை தேர்தல் தொகுதியில் 96170 பேரும் இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் 121,108 பேரும் பெல்மதுளை தேர்தல் தொகுதியில் 83,934 பேரும் நிவித்திகலை தேர்தல் தொகுதியில் 96,156 பேரும் இறக்குவானை தேர்தல் தொகுதியில் 102,618 பேரும் கொலன்ன தேர்தல் தொகுதியில் 140,748 பேரும, கலவான தேர்தல் தொகுதியில் 62,773 பேரும, பலாங்கொடை தேர்தல் தொகுதியில் 106,575 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 624 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
'நாடாளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு குழுவில் 14 பேர் போட்டியிடவுள்ளனர். அதில் 11 பேர் மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படுவர்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் 649878 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 569 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக 9500 அரச அதிகாரிகளை தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
கேகாலை மாவட்டத்திலிருந்து 9 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவர் என்றும் கேகாலை மாவட்ட செயலாளர் எச்.எம்.காமிணி செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago