2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மஹிந்த மீண்டும் வந்தால் சிறுபான்மை மக்கள் பழிவாங்கப்படுவர்

Sudharshini   / 2015 ஜூலை 22 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.ரொபட் என்டன்

'மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் வந்தால் சிறுபான்மை மக்கள் பழிவாங்கப்படுவரென ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தால் மலையக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும்; தெரிவித்துள்ள அவர்,

'முன்னாள் ஐனாதிபதி மஹிந்தவின் மீள்பிரவேசம் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சாபக்கேடு. நாடாளுமன்றத்துக்கு அவர் மீண்டும்  வந்தால் சிறுபான்மை மக்கள் பழிவாங்கப்படுவர்;. மைத்திரி- மஹிந்தவின்  இணைவு, நாடாளுமன்றத்துக்கு 20ஆவது திருத்தத்தை  வலுக்கட்டாயமாக கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மலையக மக்களின்  பிரதிநிதித்துவத்தை குறைப்பதே ஆகும்.  

மலையக மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே  நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் இவ்வாறான  சட்டமுலங்களை தடுக்க முடியும்' என்றும் அவர் தெரிவித்தார்.

'பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளின் நலனை கருத்தில்கொண்டு நாம், இம்முறை 3,000 ஆசிரியர் தொழில் வாய்ப்புகளை பெற்று தந்துள்ளோம். அதில் 2,216 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுவிட்டன. மிகுதி 784 ஆசிரியர் நியமனங்களையும் தேர்தல் முடிந்த கையோடு வழங்கவுள்ளோம்' என்றார்.

'100 நாட்கள் வேலைத் திட்டத்தினூடாக,  மலையக மக்களுக்கான  'பசுமை பூமி' வீட்டு உரிமைப்பத்திரத்தை பெற்றுக்கொடுத்துள்ளோhம். எதிர்காலத்தில் சகல தோட்ட குடியிருப்புகளுக்கும் இவ்வீட்டு உரிமைப் பெற்றுக்கொடுக்கப்படும். இதனால், மலையக மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்' என அவர் கோரினார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .