2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சுதந்திரக்கட்சி படு தோல்வியடையும்

Kogilavani   / 2015 ஜூலை 23 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதுடன் நாடு முழுதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சி தோல்வியடையுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மக்களை அச்சுறுத்தி வாக்களிக்கவிடாது தடுத்த காலம் மலையேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி, டெவோன் ரெஸ்ட்ரூரென்டில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    
'கடந்த காலங்களில் நாவலப்பிட்டியில்  ஜாம்பவானாக இருந்த கண்டி மாவட்ட அமைச்சர் ஒருவர், பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்தே ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றிப்பெற்றார்.

வாக்களிக்க செல்லவிடாது தமிழ், முஸ்லிம் மக்களைப் அச்சுறுத்தி தடுத்தே தனது நிலையை சாதகமாக்கிக் கொண்டார். ஆனால், அந்த நிலைமை இனி ஏற்படப் போவதில்லை. அதற்கு தற்போதைய அரசு இடமளிக்காது' என்றார்.

'கடந்த ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கோட்டையான நாவலப்பிட்டி ஆசனத்தை இழந்தார்.

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மஹிந்த தோல்வியடைவது நிச்சயம். அவர், நாவலப்பிட்டியில் மட்டுமல்ல, அவர் இணைந்துள்ள ஸ்ரீ.ல.சு.க முழுநாட்டிலும் தோல்வியடையும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .