2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஜூலை 23 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கண்ணொருவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற பாடசாலையின் அதிபர்,  ஆசிரியரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி, பிரதான நீதவான் எம்.ஏ. வசந்தகுமார், புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.

மாணவியின் பெற்றோர் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டதையடுத்து,  பேராதனை பொலிஸார் மேற்படி இருவரையும் புதன்கிழமை (22) கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

பேராதனை கிரிபத்கும்புர பிரதேசத்தை சேர்ந்த அதிபர் மற்றும் கண்ணொருவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .