Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 24 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொபட்ன் அன்டன்
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காளர்களான தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் மட்டும் இன்னும் பின்நோக்கிய நிலையிலுள்ளதென விவசாய தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம். கிருஸ்ணசாமி, புதன்கிழமை (22) தெரிவித்தார்.
'1,000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக கூறி, தோட்டத் தெழிலாளார்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தனர். அதனை ஏற்று தோட்ட தொழிலாளர்களும் தொழிற்சங்க பேதமின்றி போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால், இறுதியாக நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த கோரிக்கைகளை சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொழிலாளர்களை போரட்டத்தில் ஈடுபட வைத்தவர்களே எவ்வித முடிவுமின்றி போராட்டத்தை
இடைநிறுத்தியமையானது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக தொழில் அமைச்சினால் கூட்டப்பட்ட கலந்துரையாடல்களில் மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து ஆலோசித்து பின்னரே முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில்; கைசாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் மாத்திரம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமையானது பாரிய தவறாகும்.
இதற்கு முன்னர் சம்பள உயர்வு தொடர்பாக பிணக்குகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ஐனாதிபதியின் தலைமையில் மாநாடு கூட்டப்பட்டது. அதேபோல், தற்போதும் இம்மக்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு வழிவகுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்;' என குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago