2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Kogilavani   / 2015 ஜூலை 25 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை, தொடன்தெனிய பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் புதையல தோண்டிய நால்வரை மாத்தளை, பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை(24) கைதுசெய்துள்ளனர்.  

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, மேற்படி பிரதேசத்தை சுற்றிவளைத்த பொலிஸார் மேற்படி நால்வரையும் கைதுசெய்ததுடன் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு மற்றம் பதியதலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேற்படி நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .