2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நான் மலையக மக்களின் பக்கம்: தொண்டமான்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ், ரஞ்சித் ராஜபக்ஷ
   
சில நாட்களுக்கு முன்பு தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு தொண்டமான் மஹிந்த பக்கமா அல்லது மைத்திரிபால சிறிசேன பக்கமா? எனக் கேள்வி எழுப்பினார். ஆனால், நான் இரண்டு பக்கமும் அல்ல, மலையக மக்களின் பக்கம். அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமகன் தொண்டமான் தெரிவித்தார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஆதரித்து தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் உரையாற்றுகையில்.

அதை புரியாமல் மக்கள் மத்தியில் தவறான கேள்விகளை எழுப்புவதும் கருத்துகளை கூறுவதும் அவர்களின் தெளிவின்மையை காட்டுகின்றது.

தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் சிறு தோட்ட முதலாளிமார்களாக மாற வேண்டும். 7 பேர்ச் காணி அல்ல. ஒவ்வொருவரும் ஒரு ஏக்கருக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது இ.தொ.காவின் கனவு. இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நிச்சியமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள். 

மலையகத்தில் இந்த பொது தேர்தலுக்கு பின்னர் தனிவீடு திட்டம், பல்கலைகழகம் உருவாக்குதல், மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் பேட்டை அமைத்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதாக தெரிவித்தார்.

மலையக மக்களுடைய தேவைகளை நன்கு அறிந்து செயற்;பட்டதன் காரணமாகவே இக்கூட்டத்தில் காங்கிரஸில் பற்று உள்ளவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அத்தோடு, மக்கள் அனைவரும் நாங்கள் செய்கின்ற பணிகளுக்கு உரித்தானவர்கள்.

இன்று எத்தனையோ பேர் நாங்கள் பெற்றுக்கொடுத்த வாக்குரிமைகளை பயன்படுத்துவதற்காக தகரங்கள், தீப்பெட்டிகள், வர்ணப் பூச்சிகள் ஆகியவற்றை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைத்தாலும் கூட மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்களே தவிர அதற்கு அடிமையானவர்கள் அல்ல.

மேலும், தேர்தல் முடிந்தவுடன் ஏனைய மலையக அரசியல்வாதிகள் எல்லாம் கொழும்பை நோக்கி சென்று விடுவார்கள். மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது அவர்களை காப்பற்ற வர மாட்டார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமே இம்மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளின் போது கைகொடுப்பதோடு அவர்களை காப்பற்றக் கூடிய அனைத்து வசதிகளையும் செய்துள்ளது. இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

எனவே, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடம் நாங்கள் மூவரும் அதிகப்படியான வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவதோடு இம்மக்களுடைய அபிவிருத்திகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக இவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .