2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர் அட்டையில் தமிழ்க் கொலை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவா ஸ்ரீதரராவ்

இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டையில் தமிழ் எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் பெயர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இதனால், சிங்கள மொழி தெரியாத தாம், தமது பெயர்களை வாசித்து தெரிந்து கொள்வதில் பல்வேறு சிக்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நாட்டில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து கொடுத்துள்ளதாக கூறுகின்றபோதிலும் தமிழ் மக்களின் உரிமையான வாக்காளர் அட்டையில் தமிழ் எழுத்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .