Kogilavani / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக, நுவரெலியாவில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு யூ.என்.ஹெபிடாட் நிறுவனம் 3,500 முககவசங்களை, நேற்று (30) அன்பளிப்புச் செய்தது.
யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் எஸ்.எல்.அன்வர்கான் தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் முகக்கவசங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார, யூ.என்.ஹெபிடாட் நிறுவனத்தன் திட்டப் பணிப்பாளர்களான எஸ்.எல்.அன்வர்கான் மற்றும் எம்.நிமலன் ஆகியோர் முககவசங்களைக் கையளித்தனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026