Editorial / 2023 மே 27 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். எஸ்.கௌசல்யா
சோழன் உலக சாதனை புத்தகத்தில் நுவரெலியாவில் ஐந்து வயது மாணவன் கலாநேசன் ஹர்சித் என்ற சிறுவன் முதன் முறையாக சாதனை படைத்து இடம் பிடித்துள்ளார்.
உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டி அவற்றின் தலை நகரங்களின் பெயர்களை
சரியாக 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக சாதனை புத்தகத்தில் இச் சிறுவன் இடம் பிடித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் பீட்று தோட்ட பிரிவான "லவர்ஸ்லிப்" விநாயக புரத்தில் வசிக்கும் தந்தை கலாநேசன்,தாய் லலிதாம்பிகை தம்பதிகளின் பதல்வரான ஐந்து வயதான ஹர்சித் என்ற சிறுவனே இவ்வாறு சாதனை சிறுவனாக சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இச் சிறுவன் நுவரெலியா பரிசுத்த திருத்துவ தேசிய கல்லூரியின் ஆரம்பக் கல்வி பிரிவில் கல்வி கற்று வருகிறார்.
இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களூடாக கேள்விப்பட்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கும் பன்னாட்டு சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர் இக் குழந்தையின் முயற்சியை முறைப்படி பரிசோதித்து உலக சாதனையாக அங்கிகாரம் செய்தனர்..
இது தொடர்பான நிகழ்வு (25.05.2023) அன்று நுவரெலியா பரிசுத்த திருத்துவ தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவனின் உலக சாதனை முயற்சிக்கு நடுவர்களாக நேரில் வந்து பார்வையிட்டு உறுதி செய்து உலக சாதனைங்கான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பதக்கம் போன்றவற்றை வழங்கி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்களான எஸ்.ரவிச்சந்திரன், என்.நவரத்னம், பொறுப்பதிகாரி எஸ்.ஆனந்தஜோதி மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் யூட் நிமலன் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை வந்திருந்த தலைமைச் செயற்குழுவின் உறுப்பினர் பெருமாள் நீலமேகம் போன்றோர்
புதிய சோழன் உலக சாதனை படைத்த இக் குழந்தையை பாராட்டி அகம் மகிழ்ந்தனர்.
அத்திின் சோழன் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் பொது தலைவருமான மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை, உள்ளிட்ட 24 நாடுகளின் கிளைகளின் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் போன்றோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
29 minute ago
35 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
57 minute ago