Janu / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றஞ்சாட்டின் கீழ் 23 வயதான இளைஞன் பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுமனதிஸ்ஸகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆககரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரை பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்பட்டைக்கப்பட்டுள்ளதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ராமு தனராஜா
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago