Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வாகனப் போக்குவரத்துக் குற்றங்கள் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் ஊடாக, அபராதப் பணம் அறவிட நடவடிக்கை எடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 74 பேர், பணப்பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
மத்திய மாகாணத்தின், நுவரெலியா மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.ஜயசூரிய தலைமையில், கடந்த 8ஆம் திகதியன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, மேற்படி 74 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும், 5 இலட்சத்து 11 ஆயிரத்து 625 ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினது எண்ணக்கருவின் கீழ், இந்தப் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ், நல்லத்தண்ணி, வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாருக்கே, இவ்வாறு பணப் பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
46 minute ago
57 minute ago