R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
எரிபொருளை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Q R குறியீட்டை மோசடியாகப் பெற்றுக்கொண்டு ஏனையோரின் எரிபொருள் ஒதுக்கீட்டை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளும் பல சம்பவங்கள் மாத்தளையின் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான QR கள் புத்தகக் கடைகள் மற்றும் தொலைத் தொடர்பு நிலையங்களில் உருவாக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த தொலைத் தொடர்பு நிலையங்களில் இருந்து அகற்றப்படும் பிழையான அச்சிடும் தாள்கள் அல்லது குறியீடுகளை பெறுபவர்கள், நுணுக்கமாக அவற்றை எரிபொருள் நிலையங்களில் சமர்ப்பித்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும்போது, ஆவணங்களையோ பதிவுச் சான்றிதழையோ கேட்கும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருப்பதால், மோசடி செய்பவர்கள் எரிபொருளைப் பெற வாய்ப்பு உள்ளது.
நாவுல நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், மறுநாள் எரிபொருளைப் பெறச் சென்றபோது, அதே எண்ணுக்கு அன்றைய தினம் காலை எரிபொருள் பெறப்பட்டதாக குறுந்தகவல் வந்ததாகக் கூறுகிறார்.
இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்பாக பல தகவல்கள் பதிவாகி வருவதாகவும், தங்கள் QR பிறருக்குச் சொந்தமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago