2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

கட்டடம் சரிந்ததில் மூவர் காயம்

Niroshini   / 2017 மார்ச் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை, பெயார் லைன்ஸ் வீதியிலுள்ள கட்டடத்தின் பகுதி ஒன்று இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடம் ஒன்றே, இவ்வாறு அருகில் இருந்த வீடொன்றின் கூரையில் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது, வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X