2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 08 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம, மிதிகமயில் கைக்குண்டு மற்றும் 05 அலைபேசிகளை வைத்திருந்த நபரொருவரை, நேற்று திங்கட்கிழமை (07) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

வெலிகமப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பொரளை, பண்டநகர சந்திக்கு அருகாமையில் கடந்த சனிக்கிழமை (05) பெண்ணொருவரை, துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X