Editorial / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடி தலைமறைவாகி இருந்த நபரொருவரை, ஓரு மாதத்துக்குப் பின்னர், களுத்துறை-நாகொட வைத்தியசாலைக்கு அருகில் வைத்து, களுத்துறை தெற்கு பொலிஸார், இன்று (31) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கைதி தப்பியோடியதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனரென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், களுத்துறை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜித்த குணரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
43 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
45 minute ago
2 hours ago