2026 மார்ச் 18, புதன்கிழமை

ஜோன் டீ சில்வா அரங்கை தனியார்மயப்படுத்த முயற்சி?

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் டீ சில்வா அரங்கை, தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயன்று வருவதாக, சோசலிச கலைச் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்படி அரங்கை புனரமைப்பதற்குத் தேவையான 1,000 மில்லியன் ரூபாய் பணத்தை வழங்க முடியாததன் காரணமாகவே, அரசாங்கமானது, இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக, அச்சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, எலிபின்ஸ்டன் அரங்கும் மூடப்பட்டது. இதேவேளை, போதிய வசதிகள் இல்லை என லும்பினி அரங்கும் மூடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X