2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மடிக்கணனியைத் திருடிய பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிஸ் விமான நிலையத்தில் வைத்து, ஸ்ரீ லங்கா விமான சேவை விமானியொருவருக்குச் சொந்தமான மடிக்கணனியைத் திருடிய பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் இருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பிரான்ஸிலிருந்து இலங்கை வழியாக பங்களாதேஷ்க்குச் செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர்களைக் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

சந்தேகநபர்கள், 25 மற்றும் 33 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

விமான நிலையப் பொலிஸார், இது தொடர்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X