2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 மே 10 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவ, பொஹத்தரமுல்லப் பிரதேசத்தில் ரயிலில் மோதி 40 வயதுடைய நபரொருவர், இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை 6.45க்கு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், ரயில் கடவையினைக் கடக்கும் போது அளுத்கமையில் இருந்து வந்த ரயிலிலே மோதுண்டு உயிரிழந்துள்ளதாகப் பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம், பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X