2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இரா. சிவலிங்கம்; 14ஆவது நினைவுப் பேருரை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு அதனது 14ஆவது நினைவுப் பேருரையை இம்முறை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடாத்த ஏற்பாடாகியுள்ளது என ஞாபகாரத்தக் குழுவின் செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
 
இந்த நிகழ்விற்கு தோட்ட உடகட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஞாபகார்த்தக் குழுவின் தலைவருமான எம்.வாமதேவன் தலைமையில் நடைபெற உள்ளதோடு 'இலங்கையின் அரசியல் கலாசாரமும் சிறுபான்மையினரின் உள்முரண்பாடுகளும்' என்ற தலைப்பில்  கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ். அனீஸ் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். 
 
அத்துடன் முன்னாள் பிரதி அமைச்சர் பெ.இராதகிருஸ்ணன், இரா.சிவலிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிப்பதோடு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறை விரிவுரையாளர் பெ.சரவணகுமார் பேருரையாளர் பற்றிய அறிமுகத்தை நிகழ்த்தவுள்ளார். 
 
இரா.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு 2007ஆம் ஆண்டு வெளியிட்ட இன முரண்பாடும் மலையக மக்களும்: பல்பக்கப் பார்வை என்ற ஆய்வு நூலில் 'இன முரண்பாடும் மலையக மக்களும்: இரத்தினபுரி மாவட்டம் பற்றிய விசேட ஆய்வு' என்ற ஆய்வு கட்டுரைமூலம் எழுத்துலகத்திற்கு அறிமுகமான சுகுமாரன் விஜயகுமார் இம்முறை நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சம் என ஞாபகார்த்தக் குழு செயலாளர் எச்.எச். விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  
 
மலையக மக்கள் வாழ்ந்து வரும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஓபாத தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட சுகுமாரன் விஜயகுமார் அப்பிரதேச தோட்டப் பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்பு இளமாணிப் பட்டம் பெற்றுக் கொண்டவர். மக்கள் தொழிலாளர் சங்கம் 2013ஆம் ஆண்டு வெளியிட்ட தோட்டத் தொழிலாளர்களும் கூட்டு ஒப்பந்தமும் என்ற நூலை தொகுத்தளித்த இவர் மலையகத்தின் சமூக அரசியல் விடயங்கள் பற்றி பத்திரிகைகளில் எழுதிவருகின்றார். இளம் சமூக ஆய்வாளர்களை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் ஞாபகார்த்தக் குழு, சுகுமாரன் விஜயகுமார் - இரா. சிவலிங்கம் - 14ஆவது நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையிட்டு நினைவுக் குழு மகிழ்வு கொள்வதாக எச்.எச். விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  
 
இலங்கை மனவளக் கலை தலைவரும் ஞாபகார்த்தக் குழு உறுப்பினருமான பேராசிரியர் ஏ. மதுரைவீரன் வரவேற்புரை நிகழ்த்துவதோடு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஞாபகார்த்தக் குழு உறுப்பினருமாகிய தை.தனராஜ் நன்றியுரை வழங்குவார். இந் நிகழ்விற்கு பேராசிரியர் ஏ. மதுரைவீரன் அனுசரணை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .