Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியில் தொந்தரவுக்குட்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று அனுமதியளித்தார்.
இச்சந்தேக நபர், கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் கட்டிடத்திற்கு அருகில் இருந்த இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் ஒருவரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில் இங்கிலாந்தைச் சேர்ந்த அப்பெண் செப்டெம்பர் 28 ஆம் திகதி சுற்றுலாப் பயணியாக இலங்கைக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டு அறிக்கையில்படி, புறக்கோட்டை பிரதான வீதியில் கடையொன்றுக்குச் சென்ற இப்பெண்ணிடம் இலங்கையர்கள் மோசமானவர்கள் எனவும் இலங்கையர்களை நம்ப வேண்டாம் எனவும் சந்தேக நபர் தெரிவித்தார். அப்பெண் சந்தேக நபரை புறக்கணித்தபோது அப்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
அப்பெண் கடையிலிருந்து வெளியே வந்தபோது, பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டுமெனவும் தெரிவித்தாராம்.
அதன்பின் சந்தேநபர் முச்சக்கர வாகனமொன்றில் அப்பெண்ணை பலவந்தமாக ஏற்ற முயன்றபோது அப்பெண்அழுததால் அயலில் இருந்தவர்கள் திரண்டனர்.
அப்போது இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் ஒருவர் இருவரையும் பொலிஸ் ஆட்டுப்பட்டித்தெருபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குரிய புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக புகாரிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட்டபோது சந்தேக நபரை 5 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் விசாரணையை ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ibnu aboo Saturday, 01 October 2011 10:05 PM
பயங்கரவாதம்போய் இப்போது செக்ஸ் பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது . அண்மையில் ஜப்பானிய பெண்ணிடம் ஒருவர் சேட்டை விட்டார். இப்போது இங்கிலாந்து பெண்ணிடம். இப்படியே போனால் வெளிநாட்டார் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். . பயங்கரவாதத்தால் சீரழிந்த ல்லாசசப் பயனத்தை சில காம பயித்தியங்கள் சீரழித்து விடுவார்கள்.
Reply : 0 0
sri Sunday, 02 October 2011 12:45 AM
இப்னு , உங்களுக்கு கிடைக்கவில்லைய ................... ஹ ஹ .....
Reply : 0 0
Akkaraipattu Sunday, 02 October 2011 02:34 AM
@ Ibnu..... நல்லா தண்ணிய குடிங்கோ சஊடு தணியும் ........
Reply : 0 0
sb Sunday, 02 October 2011 04:19 AM
ஆண் துணையின்றி வெளியே போக கூடாதுண்டு solrathu இதுக்கும் தான். நல்லதா புரிஞ்சால் நல்லது மாக்களே..
Reply : 0 0
ibnu aboo Sunday, 02 October 2011 07:09 PM
ஸ்ரீ, அக்கறைப்பட்டு... நீங்களெல்லாம் அந்த சேட்டை விடும் கூட்டமோ. பாவம் உங்களுக்கு அம்பு பட்டுவிட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago