2025 ஜூன் 25, புதன்கிழமை

காலி முகத்திடலில் நடமாடும் விபசார நிலையம்; 6 பெண்கள் 2 ஆண்கள் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 04 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

காலிமுகத்திடலில் நடமாடும் விபசார நடவடிக்கையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் 6 பெண்களையும் இரு ஆண்களையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 5,000 ரூபா ரொக்கப்பணையிலும் 50,000 பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இம்முற்றுகைக்காக மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடம் இப்பெண்களில் ஒருவர் 5,000 ரூபா கட்டணம் வசூலித்ததாகவும் பின்னர் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபசார குழுவினரை இயக்கியதாக கூறப்படும் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இவ்விபசார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரு வானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாகனத்தின் சாரதிகளும் விபசாரத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதான சந்தேக நபரான பெண், அவரின் செல்லிடத் தொலைபேசியில் ஆபாச வீடியோவை வைத்திருந்தாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இச்சந்தேக நபருக்கு 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவரின் செல்லிட தொலைபேசியையும் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0

  • KLM Monday, 05 September 2011 02:59 AM

    ஸ்ரீலங்கா முன்னேறுகிறது

    Reply : 0       0

    sakeena. Monday, 05 September 2011 04:53 AM

    இது இந்தியாவின் பிரதி.....

    Reply : 0       0

    vijeevanitha Monday, 05 September 2011 09:40 AM

    thiruntha maddarkal nam naddavarkal.

    Reply : 0       0

    vijeevanitha Monday, 05 September 2011 09:49 AM

    sakeenavuku enathu paraddukkal

    Reply : 0       0

    vijeevanitha Monday, 05 September 2011 09:53 AM

    நன்றே மீண்டும் சந்திப்போம் sakeenaa.

    Reply : 0       0

    karan Monday, 05 September 2011 03:13 PM

    ரொம்ப முக்கியம் ..

    Reply : 0       0

    Maha SMT Monday, 05 September 2011 06:04 PM

    இந்தியாவைவிட மோசமாகிறது நம்நாடு ...

    Reply : 0       0

    xlntgson Monday, 05 September 2011 08:56 PM

    தவறான கருத்து. இந்தியாவில் எல்லா இடங்களிலும் விபச்சாரம் அனுமதி இல்லை.

    Reply : 0       0

    bzukmar Tuesday, 06 September 2011 02:25 PM

    மும்பை சிவப்பு விளக்கு பகுதி = காலி முக திடல்?

    Reply : 0       0

    mr.known Tuesday, 06 September 2011 04:35 PM

    ஆசியாவின் சிங்கப்பூர், மிக வேகமான அபிவிருத்தி சபாஷ்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .