2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

10 வயதான மாணவி மீது துஷ்பிரயோகம்; பாடசாலை வான் சாரதிக்கு விளக்கமறியல்

Super User   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                               (லக்மால் சூரியகொட)

பத்து வயதான பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட, பாடசாலை வான் சாரதியொருவரை ஏப்ரல் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை காலை மேற்படி சாரதி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இச்சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளுபிட்டியிலுள்ள கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தனது மகளை அழைத்துச்சென்ற மேற்படி சாரதி இக்குற்றத்தை புரிந்ததுடன் இது குறித்து எவருக்கும் கூறக்கூடாது என அச்சுறுத்தியதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலமளிக்கையில் தான் பாடசாலைக்கு செல்லும்போது வானில் வேறு மாணவமாணவிகள் எவரும் இருக்கவில்லை எனவும் சாரதி வானிற்குள் வைத்து தன்னை துஷ்பிரயோகம்செய்ததுடன் பின்னர் பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட சாரதியொருவரே இக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ikmsm Saturday, 31 March 2012 01:13 AM

    அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று கதைத்துகொன்டாலும், தந்தை, கணவன், கூடப்பிறந்த சகோதரர்கள் தவிர மட்டற்ற எல்லா ஆண்களும் வேறுபட்டவர்கள், அது நெருங்கிய உறவினர்களா இருந்தாலும் சரியே.

    Reply : 0       0

    உன்னைப்போல் இன்னொருவன் Saturday, 31 March 2012 04:19 AM

    மிகச் சரி ikmsm. ஆண் பிள்ளைகளின் விடயத்தில் கூட எந்த மனிதனையும் நம்பக்கூடாது. இது வெறியர்கள் தலைவிரித்தாடும் காலம்.

    Reply : 0       0

    Brightfull Saturday, 31 March 2012 04:40 PM

    சரியான செய்தி , ஜாக்கிரதை பிரைவேட் வேனில் பாடசாலை செல்லும் பிள்ளைகள்,,,,கவனம்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .