2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஈரான் தூதுவராலய கலாசார பிரிவின் கொன்சியூலர் - உயர் கல்வி அமைச்சர் சந்திப்பு

Super User   / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலய கலாசார பிரிவின் கொன்சியூலர் மெஹ்தி ஜி. ரொக்னியிற்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

ஈரான் பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள்  பல்வேறு துறைகளில் கல்வி கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்க ஈரான் அரசு தயாராக இருப்பதாக கொன்சியூலர் இதன்போது அமைச்சர் திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் ஈரான் நிலையம் அமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதுடன் முதற கட்டமாக களனி பல்கலைக்கழகத்தில் ஈரான் நிலையம் ஆரம்பிப்பது எனவும் இச்சந்திப்பின் போது, தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .