Super User / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம். முஸம்மில் ராஜினாமா செய்துள்ளார். அவர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரர் கேட்டபோது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.
ஐ.தே.கவின் மேயர் வேட்பாளராக தான் விளங்குவார் என கட்சி இன்னும் தனக்கு அறிவிக்கவில்லை என அவர் கூறினார். எவ்வாறெனினும் தான் மேயர் வேட்பாளராகுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
கொழும்பு மேயர் வேட்பாளராக கருதப்படும் மேல் மாகாண சபையின் மற்றொரு ஐ.தே.க. உறுப்பினரான கே.வை.பி. ராம் இது தொடர்பாக கூறுகையில், தானும் ஏ.ஜே.எம். முஸம்மிலும் முன்னாள் அமைச்சர் கருணாசேன கொடிதுவக்குவும் மேயர் வேட்பாளர் பதவிக்காக கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவினால் செவ்வாய்க்கிழமை மாலை நேர்காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறிய ராம், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தான் போட்டியிட்டாலும் மாகாண சபை உறுப்பினர் ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் கூறினார்.
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago