2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மனோ கணேசன் அணியின் வேட்பாளராக லக்ஷ்மன் கதிர்காமரின் சகோதரர்

Super User   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் ஒன்றுவிட்ட சகோதரரான சீலன் கதிர்காமர், தெஹிவளை –  கல்கிஸை மாநகர சபைத் தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இது தொடர்பாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரரிடம் சீலன் கதிர்காமர் பேசுகையில், ஜனநாயக மக்கள் முன்னணியானது இலங்கையின் மூவின சமூகங்களையும் கொண்ட ஓர் கூட்டமைப்பாக விளங்குவதாகவும் நாட்டின் அனைத்து இன மக்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை கொண்டிருப்பதாகவும் கூறினார். இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.

பிரதான அரசியல் கட்சிகள் அனைத்து சமூகங்களையும் சார்ந்த வேட்பாளர்களை களமிறக்கினாலும் இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என சீலன் கதிர்காமர் கூறினார். 'ஐ.தே.க., ஸ்ரீல.சு.க. ஆகியன இந்நாட்டை 60 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த போதிலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிவிட்டன' என அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு மாற்றான கட்சியாக ஜனநாயக மக்கள் முன்னணி தன்னை நிலைநிறுத்துவதாக அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

நவ சமசமாஜக் கட்சி, சமூக ஜனநாயக ஒற்றுமை அமைப்பு ஆகியன ஜ.ம.முன்னணியின் ஏணி சின்னத்தின்கீழ் கொழும்பு மாநாகர சபைக்கும் தெஹிவளை - கல்கிஸை மாநகர சபைக்கும் கொலன்னாவை பிரதேச சபைக்கும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. கொழும்பு மாநாகரசபைக்கான மேயர் வேட்பாளராக மனோ கணேசனும் தெஹிவளை –கல்கிஸை மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்னவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு, ஐ.தே.கட்சி ஆகியவற்றுக்கு தமிழர்கள் வாக்களிப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என மனோ கணேசன் கூறினார்.  'நாம் ஐ.தே.க.வுடன் ஐ.தே.முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்திருந்தபோது தமிழர்கள் அக்கட்சிக்கு வாக்களித்தனர். இப்போது ஐ.தே.முன்னணி கடந்தகால வரலாறாகிவிட்டது.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு இருந்த வாய்ப்பை ஐ.ம.சு.கூட்டமைப்பு தவறவிட்டுவிட்டது. அத்துடன் கொழும்பு மற்றும் தெஹிவளை –கல்கிஸை மாநகர பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையான இடதுசாரி மற்றும் சமூக ஜனநாயக நோக்குள்ள மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியை ஓர் மாற்று சக்தியாக கருதுகின்றனர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

சீலன் கதிர்காமர்

சீலன் (சாந்தசீலன்) கதிர்காமர் யாழ்ப்பாணக் கல்லூரியில் 1959-69) நவீன வரலாறு மற்றும் சர்வதேச அரசியல் கற்பித்த பின்னர் 1970 முதல 1978 வரை யாழ் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் 1979 முதல் 1983 வரை யாழ் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

இடது சாரி அமைப்புகளின் நீண்டகால ஆதரவாளரான அவர், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக 1960 களில் யாழ்ப்பாணத்தில் பிரசாரங்களையும் மேற்கொண்டார்.

மனித உரிமை செயற்பாட்டாளராக விளங்கிய அவர், 1970 இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயங்கத்தின் யாழ் கிளைத் தலைவராகவும் செயற்பட்டார். 1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டபின் யாழ் பிரஜைகள் குழுவை ஸ்தாபித்து அதன் தலைவராக செயற்பட்டார்.

அவர் 1983 முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் பல பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0

  • Hot water Monday, 29 August 2011 06:39 PM

    லக்ஷ்மன் கதிர்காமரின் சகோதரருக்கே சுதந்திரக்கட்சி வெறுத்துவிட்டதா?

    Reply : 0       0

    meenavan Monday, 29 August 2011 07:05 PM

    அப்படி அல்ல மகி கம்பெனி வெறுத்துவிட்டது,Hotwater

    Reply : 0       0

    Nesan Monday, 29 August 2011 11:58 PM

    சந்திரிகா ஒரு ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தம்பி அநுரா ஐ.தேக.வில் இருக்கவில்லையா? அது போலத்தான் இதுவும்

    Reply : 0       0

    NAKKIRAN Tuesday, 30 August 2011 01:03 AM

    வாழ்க ! வாழ்த்துக்கள் , வெல்க வெல்க வெல்கவே .

    Reply : 0       0

    aj Tuesday, 30 August 2011 02:06 AM

    வாழ்த்துக்கள் மனோ அண்ணா.

    Reply : 0       0

    jaampavan Tuesday, 30 August 2011 03:17 AM

    ஒன்று விட்ட தம்பியும் கதிர்காமரா ?.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .