Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
விஸா இல்லாமல் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜையொருவர், தான் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளதாக நீதிமன்றில் இன்று அறிவித்தார்.
சீனாவின் சோங்கிங் பிராந்தியத்தைச் சேர்ந்த பான் ஜுன் எனும் இந்நபர் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்திலும் தன்னை பதிவுசெய்துள்ளார்.
இவர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது இவரின் புகலிடக் கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதவான் நாடினார். எனினும் சந்தேக நபரை செப்டெம்பர் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி சீனப் பிரஜை கொழும்பு -2 கங்காராம விகாரைக்கு அருகில் திரிந்தபோது , குடிவரவு, குடியல்வு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் செல்லுபடியான விஸா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தான் புகலிடம் கோரியுள்ளவர் எனவும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்திலும் தான் பதிவு செய்துகொண்டுள்ளதாகவும் சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்தார். இது தொடர்பாக மேற்படி உயர்ஸ்தானிகராலயம் வழங்கிய ஆவணமொன்றையும் அவர் நீதிமன்றில் காண்பித்தார்.
புகலிடம் கோரும் இந்நபர் தனது உயிருக்கோ சுதந்திரத்திற்கோ ஆபத்திருப்பதாக கூறும் நாட்டிற்கு பலவந்தமாக திருப்பி அனுப்பப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதிவரை செல்லுபடியானதாகும்.
இதேவேளை கொம்பனித்தெரு பொலிஸாருக்கு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பாக இந்த உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நீதிமன்றில் முன்வைக்குமாறு பொலிஸாரிடம் அகதிகளுக்கான ஐ.நா. உயர்தானிகராலயம் கோரியுள்ளது.
KLM Tuesday, 06 September 2011 11:26 PM
இக்கரைக்கு அக்கரை பச்சை
Reply : 0 0
manithan Wednesday, 07 September 2011 01:08 AM
அவரது கோரிக்கை நியாயமானதெனின், கட்டாயம் அவருக்குப் புகலிடம் வழங்கத்தான் வேண்டும். இதற்கு முன்னர் ஈராக்கியர்கள் சிலர் உட்பட வெளிநாட்டினர் சிலர், போர் நடந்து கொண்டிருந்த போதிலும் இலங்கையில் புகலிடம் வழங்கப்பட்டது.
Reply : 0 0
whistle blower Wednesday, 07 September 2011 01:58 AM
சிறிலங்காவிலும் மக்கள் புகலிடம் கோருகிறாங்கோ ஆனா ஸ்ரீலங்கன்ஸ் வேறு நாடு போகினம் இ ஐயோ ஐயோ. இக்கரைக்கு அக்கரை பச்சை.
Reply : 0 0
meenavan Wednesday, 07 September 2011 02:17 AM
பான் ஜூன் இலங்கையை, இக்கட்டு நிலைக்கு ஆளாக்கி, உங்கள் நாட்டினால் எங்கள் நாட்டிற்கு கிடைக்கும் நிதி (பிச்சைகளை)உதவிகளை இல்லாமலாக்க முயற்சியா? பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டு மீண்டும் சீனா செல்ல ஆயத்தமாகுங்கள்.
Reply : 0 0
Manithan Wednesday, 07 September 2011 04:46 AM
விட்டில் பூச்சி விதியை நொந்துகொள்ளட்டும்.
Reply : 0 0
sahabdeen Wednesday, 07 September 2011 09:45 AM
யாரு யாரிடம் அரசியல் தஞ்சம் கோருவது.
Reply : 0 0
roshan Wednesday, 07 September 2011 04:12 PM
இலங்கையில் புகலிடம் எதற்கு? இருக்கும் பிரச்சினை போதாதா ?
Reply : 0 0
xlntgson Wednesday, 07 September 2011 09:40 PM
சீனாவில் இவர் எதிர்நோக்கும் பிரச்சினைதான் என்ன? பயங்கரவாத சந்தேகநபர் என்றால் அமெரிக்கா போன்ற வேறு நாட்டுக்கு போகலாமே! இலங்கையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், இலங்கை சீனாவின் மிக நெருக்கமான நாடு என்று தெரியாதா?
பொருளாதாரப் புகலா, மனித உரிமையா, அதிகம் சுகம் தேடும் எண்ணமா?
?ஜின்ஜியாங் மாநிலம் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட மாநிலம் ஒரு ஜோடிக்கு ஒரு பிள்ளை மட்டுமே சட்டத்தில் மனநிலை மிகவும் பாதிக்கப் பட்டவர்களும் உண்டு.
இவர்கள் களவாகப் பிள்ளை பெற்றவர்கள் போல் பிள்ளைகளை விற்பதாகவும் மேற்கின் ஊடகங்கள் செய்தி.
Reply : 0 0
ibnuaboo Friday, 16 September 2011 03:25 AM
அடைக்கல கோரிக்கை நியாயமென நிருபிக்கப்பட்டால் அவருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பது இலங்கையின் மனிதாபமான உதவியாகும். இலங்கையர் யாரும் சீனாவிடம் அடைக்கலம் கேட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நம்மவர்கள் இல்லாத பொல்லாத கதை எல்லாம் கூறி ஐரோப்பிய நாடுகளில் அடை௮க்கலம் பெற்றார்கள் தானே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
4 hours ago