2025 ஜூன் 25, புதன்கிழமை

அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இறுதி எச்சரிக்கை

Super User   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பத்திரத்தை உடனடியாக மீளப்பெறுமாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவிற்கு அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று புதன்கிழமை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் அனுமதியை உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறும் அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏழு நாட்களுக்குள் உயர் கல்வி அமைச்சர் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளும் என அச்சங்கம் மேலும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0

  • Haleem Thursday, 08 September 2011 01:23 AM

    அமைச்சரே விரைந்து செயற்படுங்கள் . இது தேசத்துக்கு தேவையானது. இலங்கை வைத்தியர்களுக்கு அல்ல . எத்தனையோ திறமையான மாணவர்களுக்கு உள்ளூரில் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை அவர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். புதிய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    ansar Thursday, 08 September 2011 01:43 PM

    ப்ளீஸ் இது சீரியஸ் மேட்டர். மெடிசின் காஷ் கொடுத்து பெரும் டிகிரி இல்லே. மனித லைப் என்பது ஒரு பில்டிங் கட்டுறேதோ இல்லை. உயிரோடு விழையாட முடியாது. அதுக்கு ஒரு புல் அறிவு வேண்டும்.காசு இருந்தாஇ காட்ஸ்இ கரம் விளையாடுங்கோ, ல்ய்போட வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .