2025 ஜூன் 25, புதன்கிழமை

கொழும்பு மாநகர சபை செயற்பாடுகளுக்கு மத்திய அரசின் நிதியை நம்பியிருக்க போவதில்லை: முஸம்மில்

Super User   / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபையின் வருமானம் போதுமானதாக இருப்பதனால், தான் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டால் மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் நிதியை நம்பியிருக்க போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் கொழும்பு மாநகர மக்களுக்கு பாதகமான எதனையும் செய்யாத போது, அவற்றுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றி அவர் மத்திய அரசாங்கம் தற்போது வங்குரோத்து நிலையிலுள்ளதாக அவர் கூறினார்.

இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சியினால் மத்திய அரசாங்கத்தின் ஆதுரவின்றி நிர்வாகம் செய்ய முடியாது என சில அமைச்சர்கள் தெரிவிக்கின்றமைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க ஊழியர்களின் ஆறு மாத சம்பளத்தை மட்டும் வழங்கும் அளவுக்கு மோசமான நிதி நிலமையை கொண்டுள்ள அரசாங்கம் எவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உதவி செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன உங்களுக்கு போட்டியாக அமையுமான என கேட்ட போது, இரு கட்சிகளும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதாக முஸ்ம்மில் குறிப்பிட்டார். Pix By:Pradeep Pathirana



 

 


You May Also Like

  Comments - 0

  • Whistle Blower Friday, 16 September 2011 01:25 AM

    உங்கட பணத்தை போடபோறீங்களோ ?

    Reply : 0       0

    sakeena. Friday, 16 September 2011 04:18 AM

    ரணிலப் போலவே பேசுராருப்பா...இதனால தான் ஹக்கீம் கழற்றி விட்டாரோ.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .