Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
தனது தந்தையை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை தொலைக்காட்சி நாடக நடிகையான அனுஷ்கா சொனாலி சயக்காரவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் அனுமதித்துள்ளார்.
தன்னை மகள் தன்னை அச்சுறுத்தி ஒரு லட்சம் ரூபா பணத்தை பெற்றதாகவும் மேலும் ஒரு லட்சம் ரூபா பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அந்நடிகையின் தந்தை கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் 400,000 ரூபாவை தனது மகளுக்கு வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார். நோயாளியான பணம் கோரி தனது மகள் விடுக்கும் அச்சுறுத்தல்கள் காரணமாக தான் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சந்தேக நபர் விபசார விடுதியிலிருந்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அத்தந்தை கூறியுள்ளார்.
மேற்படி நடிகை 50,000 ரூபா பணத்தை பெறுவதற்கு வந்தபோது தந்தை கொடுத்த முறைப்பாட்டையடு;த்து கொம்பனித்தெருவில் வைத்து நடிகையை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபரான நடிகை அனுஷ்கா சொனாலி சயக்கார கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 4000 ரூபா ரொக்கப்பிணையிலும் 25,000 ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் லங்கா ஜயரட்ன அனுமதித்தார்.
Nirmalalraj Thursday, 06 October 2011 10:08 PM
தந்தையிடமேவா?
Reply : 0 0
meenavan Thursday, 06 October 2011 10:18 PM
சில தினங்களுக்கு மகனை சித்திரவதை செய்த தந்தை செய்தி. இன்று தந்தையை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மகள். நாடு எங்கே செல்கிறது? சமய வியலாளர், சமூக, அரசியலாளர்கள் அவதானத்திற்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago