2025 ஜூன் 25, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரி லெஸ்லி சரத் எதிரிசூரிய சேவையிலிருந்து ஓய்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திலக் நிமலசூரிய)

கம்பஹா மாவட்ட பொலிஸ் அதிகாரி லெஸ்லி சரத் எதிரிசூரிய 40 வருடகால சேவையை பூர்த்தி செய்துள்ள நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் 1973ஆம் ஆண்டு முதல் சேவையில் இணைந்து மருதானை, மாவனல்ல, பொலன்னறுவை, கம்பஹா, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் சேவையாற்றியுள்ளார்.

இவரின் சேவைக்காலத்தில் 3750 நன்நடத்தைப் பரிசுகளும் பொலிஸ் மா அதிபரின் 9 விசேட நன்னடத்தைப் பரிசுகளும் பெற்றுள்ளார்.  இவரின் சேவைக்காலத்தில் முதலுதவிப் பதக்கம், சுவர்ணபூமிப் பதக்கம், 125 வருட பொலிஸ் பதக்கம், ஸ்ரீலங்கா பொலிஸ் விசேட பதக்கம், சுவர்ண விசேட பதக்கம் ஜனநாயக பதக்கம்  ஆகியவற்றையும் பெற்றுள்ளாக்ர். மானவர் காலத்தில் மாத்திரமல்ல பொலிஸ் சேவைக் காலத்திலும் போட்டிகளிலும் விசேட கவனம் செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தராகவும் இவர் கருதப்படுகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .