Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 23 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே .என்.முனாஷா)
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களின் பேரணியொன்று நீர்கொழும்பு நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனயீர்ப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்தே இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த பேரணியில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த மீனவ அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .
நீர்கொழும்பு ருக்மணி தேவி ஞாபகார்த்த மண்டப அருகிலிருந்து ஆரம்பமான இந்த பேரணி பிரதான வீதி வழியாக நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையம் வரை இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
41 minute ago