2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அரசியற் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் மனதார விரும்ப வேண்டும்: குமரகுருபரன்

Super User   / 2012 மார்ச் 28 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விசுவாசமாக  அமுல்படுத்தி எதிர்காலத்தில்  நியாயமான  அரசியற் தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்தின் தலைமையும் இணைந்த கட்சிகளும் தமது சிந்தையிலும் மனப்பாங்கில் விசுவாசமாக  பாரிய மாற்றம் காண மனதார விரும்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்  கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்.

விசுவாசமிருந்தால் ஒரு தேவையும் இல்லாமலே பல்வேறு கருத்துக்களையு ம் காழ்ப்புணர்வு கொண்டு கொட்டித் தீர்க்க தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துட்ன் "நாம் அடிபணியமாட்டோம்இ நல்லிணக்க  ஆணைக்குழு  பைபிள் அல்ல, முழுவதையும் அமுல்படுத்தமுடியாது" என்று சிரேஷ்ட அமைச்சர்களும் "ஒரு பொழுதும் பரிந்துரைகளை   நடைமுறைபடுத்த   அனுமதியோம், வீதியில் இறங்கி போராடுவோம்" என அமைச்சர்  விமல் வீரவன்சவும் "ஜெனிவா சென்றிருந்த  மனித உரிமைவாதிகளின் காலை அடித்து   முறிப்பேன்" என்று அமைச்சர் மேர்வின் சில்வாவும்  கூட்டுப்பொறுப்பின்றி பேசுவதற்கும் இவர்களின் மனம் ஆசைப்படும் பொழுது அரசும் இப்படி பேச இவர்களை வைத்துக்கொள்ள விரும்பும் பொழுது   இன்னமும் அரை நூற்றாண்டு சென்றாலும்   இந்த நாட்டில் மனித உரிமை   பிரச்சனைகளுக்கோ நூற்றாண்டு   காணும் இனபிரச்சனைக்கோ தீர்வு வந்துவிடாது என கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்.

"வெளிநாட்டு சக்திகளின் அல்லது சர்வதேச சக்திகளின் பொறுப்பான பங்களிப்பின்றி இந்த நாட்டில் சமாதானம் காண முடியாது. முடிந்து விட்ட பெரிய அளவிலான யுத்தத்தின் பின்னர் சர்வதேசமும் பார்த்து கொண்டிருக்கமாட்டாது.

எனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விசுவாசமாக அமுல்படுத்தவும் எதிர்காலத்தில்  நியாயமான அரசியற் தீர்வு காண்பதற்கும் அரசாங்கத்தின் தலைமையும் இணைந்த கட்சிகளும் தமது சிந்தையில்  மனப்பாங்கில் விசுவாசமாக உடனியாக பாரிய மாற்றம் காண மனதார விரும்ப வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .