2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள் உற்சாகத்தை அளிக்கின்றன: பிரபா கணேசன

Super User   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகள் கல்வி பொது தராதர க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது தனக்கு மேலும் கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தியை செய்வதற்கான உத்வேகத்தை அளித்திருப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட ஒரு சில தமிழ் பாடசாலைகள் மட்டுமே சிறந்த பெருபேறுகளை பெற்று வந்தன. 2004ம் ஆண்டு முதல் கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி சம்பந்தமாக முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றேன். பல பாடசாலைகளின் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தளபாட பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நவீன விஞ்ஞான உபகரனங்கள், பிரதி இயந்திரங்கள், கணினி தொகுதிகள் போன்ற அவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் இவ்வருடம் பல பாடசாலைகளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கம நெகும திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு நவீன கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளேன்.

இவ்வருடம் இரண்டு பாடசாலைகள் அடையாளங் காணப்பட்டு அவற்றிற்கான கட்டிடங்கள் கட்டும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளேன்.
எது எவ்வாறாயினும் இம்முறை பாடசாலைகளின் 2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு மாவட்ட ரீதியாக சிறப்பாக பெறப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் 13 மாணவர்கள் 9 பாடத்திலும் அதி சிறப்பு சித்தியடைந்துள்ளார்கள். இதே போன்று இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் சிறப்பான பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன.

மேலும் விவேகானந்தா தேசிய கல்லூரி, தெமட்டகொட விபுலானந்தா மகாவித்தியாலயம், கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், மாவத்தை புனித அந்தோனியார் வித்தியாலயம், முகத்துவாரம் இந்து கல்லூரி போன்றவற்றிலும் சிறப்பான பெருபேறுகள் பெறப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர்கள் எனக்கு விபரத்தை அனுப்பியுள்ளார்கள். அதிலும் மூன்று கோடி ரூபா செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட மத்திய கொழும்பு இந்து மகாவித்தியாலயத்திலும் 9 பாடங்களிலும் சிறப்பு சித்தி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் குறிப்பிட்ட ஒரு சில பாடசாலைகளில் மட்டும் பிள்ளைகளை சேர்ப்பதற்கு முயற்சிப்பதை தவிர்த்து வட மத்திய கொழும்பிலுள்ள இச்சிறந்த பாடசாலைகளிலும் அனுமதி பெறப்பட வேண்டும். பாடசாலை அதிபர்களும் எதிர்வரும் காலங்களில் இதைவிட அதிகமான சிறந்த பெருபேறுகளை பெறுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இச்சிறப்பு பெருபேறுகளினால் எதிர்வரும் காலங்களில் கொழும்பு மாவட்ட பாடசாலை அபிவிருத்திகளில் உற்சாகமாகவும் வேகமாகவும் செயல்படுவதற்கு தீர்மனித்துள்ளேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .